நள்ளிரவில் 18 வயசு பையனோடு அந்த கோலம்" பார்க்கக்கூடாததை பார்த்த மாமியார். ஆத்திரத்தில் உண்மையை உளறிய மருமகள். பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.!!
Mathura - Raya) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்கர்பூர் பசேலா (Bhankarpur Basela) கிராமத்தில் மார்ச் 3-ஆம் தேதி அன்று அன்வரி பேகம் என்ற முதியவர் உயிரிழந்தார்.
இவருடைய மகன் மற்றும் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், வீட்டில் மருமகள் ஹீனா மற்றும் மாமியார் மட்டுமே இருந்துள்ளனர். மார்ச் 3-ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில், ஹீனாவின் கள்ளக்காதலன் ஆதில் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அன்வரி பேகம் நேரில் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹீனாவும் ஆதிலும் சேர்ந்து, தலையணையால் அன்வரி பேகத்தின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.
மாமியார் உயிரிழந்ததும், “அம்மிக்கு திடீரென சைலண்ட் ஹார்ட் அட்டாக் (Silent Attack) வந்துவிட்டது” என்று ஹீனா தனது கணவருக்கும் மாமனாருக்கும் போன் செய்து தகவல் கொடுத்து அவர்களை நம்பவைத்துள்ளார். குடும்பத்தினர் எவ்வித சந்தேகமும் இன்றி முதியவரின் உடலை அடக்கம் செய்துவிட்டனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு ஹீனாவின் நடவடிக்கைகளில் அவரது மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் ஒரு தகராறு ஏற்பட்டபோது, “உன் அம்மாவைக் கொன்றது போலவே உன்னையும் கொன்றுவிடுவேன்” என்று ஹீனா ஆத்திரத்தில் பேசியது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
இதையடுத்து முதியவரின் கணவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மார்ச் 10-ஆம் தேதி உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததும், அவரது கழுத்து எலும்பு உடைந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருமகள் ஹீனா மற்றும் அவரது 19 வயது கள்ளக்காதலன் ஆதில் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
