கணவருடன் உடலுறவின் போது ஏற்பட்ட ‘விபரீத ஆசை’ - காட்டில் மூன்று பாகங்களாக கிடைத்த சடலம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்

 

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள சொரிக்கான் பட்டியில் நடந்த கொடூர சம்பவத்தில், 3 வயது சிறுமியை அவரது தந்தை-தாய் சேர்ந்து கொன்று காட்டில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் தென்காசியைச் சேர்ந்த கண்ணன் (வயது 35). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (வயது 28) என்பவரை மூன்றாவது திருமணமாக செய்துகொண்டார். 


கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து, கணவர்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரது இரண்டாவது கணவரான அச்சு என்பவருக்கும் கலாசூர்யாவுக்கும் சிவானி என்ற பெண் குழந்தை உண்டு. இந்தக் குழந்தையுடன் கலாசூர்யா, கண்ணனுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 


சிறுமி சிவானி, தனது புதிய தந்தையான கண்ணனுடன் பழகத் தொடங்கியிருந்த நிலையில், கண்ணனுக்கு விபரீத ஆசைகள் தோன்றியதாகத் தெரிகிறது. மனைவி கலாசூர்யாவுடன் உடலுறவில் ஈடுபடும் போதெல்லாம், "உன் மகள் சிவானி தொந்தரவாக இருக்கிறாள், ஏதாவது செய்துவிடலாம்" என கண்ணன் அடிக்கடி தனது விபரீத எண்ணங்களை வெளிப்படுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 


கடந்த 20 நாட்களுக்கு முன்பு, கலாசூர்யா கடைக்குச் சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த கண்ணன் சிறுமி சிவானியை சரமாரியாக அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றார். கடைக்குச் சென்று திரும்பிய கலாசூர்யா, மகளின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உயிரிழந்த சிறுமியின் விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என இருவரும் சேர்ந்து உடலை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டு வந்தனர். 


இதன்பிறகு, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்ட கலாசூர்யா, தனது தாய் வீட்டுக்குச் சென்றார். அங்கு உறவினர்கள் சிவானியைப் பற்றிக் கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தார். 


இதனால் சந்தேகமடைந்த சிவானியின் பாட்டி சாந்தி, இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கேரள போலீசார் மற்றும் செக்கானூரணி காவல்துறையினர் இணைந்து நடத்திய விசாரணையில், கண்ணன் மற்றும் கலாசூர்யா குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 


இருவரின் உதவியுடன் போலீசார் காட்டுப் பகுதியில் தேடியபோது, சிறுமியின் உடல் மூன்று பாகங்களாக எலும்புக்கூடுகளாகக் கிடைத்தது. காட்டுப் பகுதி என்பதால், நாய்கள் அல்லது காட்டு மிருகங்கள் உடலை உண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.