மனைவியை கொலஐ செய்து பிணத்துடன் செல்ஃபி.. கள்ளக்காதலை தாண்டி இருக்கும் இன்னொரு கொடூர காரணம்..

 

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை அவரது கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.


கொலைக்குப் பிறகு, அவளது சடலத்துடன் செல்பி எடுத்து, "துரோகத்தின் சம்பளம் மரணம்" என WhatsApp ஸ்டேட்டஸில் பதிவேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 32) என்பவருக்கும், ஸ்ரீ பிரியா (வயது 28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. சமீப காலமாக குடும்ப பிரச்சினைகள் காரணமாக பிரியா தனது கணவரை விட்டு பிரிந்து, கோவையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அங்கு அவர் வேறொரு ஆணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.


இந்த விவகாரம் பாலமுருகனுக்கு தெரிய வந்தது. ஆனால், இந்த கொடூர கொலை வெறியை தூண்ட என்ன காரணம்..? என்ற விசாரணையில் தெரிய வந்த தகவலின்படி, பிரியாவின் கள்ளக்காதலன், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார். 


இதனால் உச்சகட்ட கோபமடைந்த பாலமுருகன், அரிவாளுடன் விடுதிக்கு சென்று பிரியாவை தாக்கி கொலை செய்துள்ளார்.


கொலைக்குப் பிறகு, சடலத்துடன் செல்பி எடுத்து அதை கள்ளக்காதலனுக்கு அனுப்பியதுடன், WhatsApp ஸ்டேட்டஸிலும் பதிவேற்றியுள்ளார். பின்னர், அமைதியாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 


போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.


பாலமுருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கள்ளக்காதல் விவகாரங்களின் கொடூர விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது. 


திருமண உறவுகளில் ஏற்படும் சச்சரவுகள், துரோக உணர்வுகள் போன்றவை வன்முறைக்கு வழிவகுக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

நிபுணர்கள் கூறுகையில், இதுபோன்ற சூழல்களில் உளவியல் ஆலோசனை பெறுவது அவசியம் என்று அறிவுறுத்துகின்றனர். 


கள்ளக்காதல் போன்ற விவகாரங்களில் ஈடுபடுவது தனிநபர் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அதிலிருந்து வெளியேறுவது எளிதல்ல.


இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே பாதுகாப்பாக பிரிய முடியும்; இல்லையெனில், இதுபோன்ற கொடூர சம்பவங்களில் முடியும் என்பதை சமூகம் உணர வேண்டும்.


இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், திருமண உறவுகளை வலுப்படுத்துவதும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதும் முக்கியம். போலீசார் இதுபோன்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.