மனைவிக்கு ஆண் நண்பரை போல அந்தரங்க மெசேஜ் அனுப்பிய கணவர்.. கொடூரத்திற்கு வழி வகுத்த மனைவியின் ரிப்ளை..!

 

ஆந்திராவின் சூரியனும், மண்ணும், மக்களின் வாழ்க்கையும் இணைந்து நடனமாடும் பிரகாசம் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தில், கோட்டா ராதா என்ற பெண் பிறந்தாள்.


அவள் 35 வயதான போது, அவளது வாழ்க்கை ஒரு கிரைம் நாவலின் பக்கங்களைப் போல, அழகும், அன்பும், துரோகமும் கலந்து நிறைந்திருந்தது. ராதா, ஹைதராபாத் நகரின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர்.


சினிமா நடிகை போல அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என அழகு தேவதையாக இருந்த ராதாவிற்கு அங்கே பணியாற்றிய, மோகன் ரெட்டியுடன் காதல். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 


இருவருக்கும் இரண்டு குழந்தைகள் – ஒரு மகன், ஒரு மகள் – அவர்களது வாழ்க்கையை இனிமையாக்கியிருந்தனர்.


ஆனால், அந்த இனிமையின் கீழ், பணத்தின் இருளும், சந்தேகத்தின் நச்சும் வளர்ந்து கொண்டிருந்தன. ராதாவுடன் பள்ளி, கல்லூரியில் சேர்ந்த படித்த நண்பர் காசி ரெட்டி. நண்பர்கள் என்ற முறையில் மிகவும் நெருக்கமாக வளர்ந்தனர்.


ஒரு கட்டத்தில், காசி ரெட்டி, தொழில்முறையில் தடுமாற்றங்களைச் சந்தித்தான். பலரிடம் உதவி கேட்டும் பலனில்லை. கடைசியாக ராதாவிடம், நான் புதிய தொழில் ஒன்றை தொடங்க இருக்கிறேன். அதற்கு ஒரு கோடி வரை செலவு ஆகும். உன்னால் முடிந்த உதவியை செய் என்று கேட்கிறான்.

பள்ளிக்காலம் தொட்டு நண்பன், நாணயமானவன், இவனை நம்பாமல் வேறு யாரை நம்புவது..? என்று ராதா அவனுக்கு 15 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார். 


ஆனால், அந்த பணம் போதாது. வங்கியில் என்ன வட்டி தருகிறார்களோ.. அதை நான் கொடுக்கிறேன்.. என்று கூறவே, ராதா தனது கணவரின் உதவியுடன் மேலும் 65 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். மொத்தம் 80 லட்சம் ரூபாய்களை நட்பு என்ற ஆதாரத்தின் பேரில் காசி ரெட்டிக்கு கொடுத்துள்ளார் ராதா.


மோகன் ரெட்டி, அந்தக் கடனை அளிக்கும் போது, அது தனது மனைவியின் நம்பிக்கையின் அடையாளமாக நின்றது. ஆனால், காலம் செல்லச் செல்ல, காசி அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்கத் தவறினான். அவனுடைய தொழில் நசிந்து போனது. ஒரு கட்டத்தில் தலைமறைவாகி விட்டான்.


அந்தப் பண இழப்பு, ராதாவின் மனதில் மிகப்பெரிய பாரமாக மாறியது. மோகன் ரெட்டி, ராதா குடும்பத்தை இருள் சூழ தொடங்கியது. ராதாவிடம் கேட்டால், அவன் எங்கயும் போக மாட்டான், கரெக்டா கொடுத்துடுவான்.. அவனை சந்தேகப்படாதிங்க.. என்று தொடர்ந்து காசி ரெட்டிக்கு ஆதரவாகவே பேசி வந்தார்.

இது, கணவர் மோகன் ரெட்டி மனதில், சந்தேகத்தின் தீயாக மாறியது. மோகன் ரெட்டி, தனது மனைவியின் நம்பிக்கையைப் புரிந்து கொள்ளவில்லை. 


"அவள் காசியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறாள்" என்ற சமயோசிதமான சந்தேகம் அவனது மனதில் வேரூன்றியது. வீட்டில் சச்சரவுகள் தொடங்கின. ராதா, தனது கணவரின் குற்றச்சாட்டுகளை மறுத்தாள். "அது எனது நண்பருக்கு கொடுத்த உதவி, காதலும் அல்ல.. எங்களுக்குள்ள கள்ள தொடர்பும் இல்ல.." என்று வாதிட்டாள்.


ஆனால், மோகன், அந்த சச்சரவுகளைத் தாங்க முடியவில்லை. அவனது கோபம், சந்தேகம், பண இழப்பின் வலி – அனைத்தும் ஒரு இருண்ட திட்டத்தின் விதைகளாக மாறின.


மே மாதம் 5, 2023. ராதா, தனது சொந்த ஊர் வேலிகண்டலாவுக்கு அழைக்கப்பட்டாள். கோயில் விழா – குடும்பத்தின் பாரம்பரியம். அவள் ஹைதராபாத்திலிருந்து பயணித்து வந்தாள். அங்கு, அவளது குடும்பம், நண்பர்கள், அன்பின் நினைவுகள் காத்திருந்தன. மோகன், தனது கொடூரத்தை திட்டத்தைத் திட்டமிட்டிருந்தான்.


அவன் தனது மனைவியின் பெயரில் 1.5 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தான். மே 15 அன்று, மோகன் ரெட்டி வேறு ஒருவரின் பெயரில் ஒரு புதிய சிம் கார்ட்டைப் பெற்றான்.


சங்கர் ரெட்டி என்ற தனது நண்பரான ஒரு கரும்பு ஜூஸ் கடைக்காரரிடமிருந்து ஒரு போனைப் பெற்று, அந்த சிம்மை அவன் போனில் வைத்தான். அந்த போனில் இருந்து, நான் காசி ரெட்டி, "ராதா, நான் இன்று 2 லட்சம் ரூபாய் கொண்டு வருகிறேன். பமுரு பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம்." ராதாவின் இதயம் படபடத்தது.


அந்த மெசேஜை பார்த்ததும் ராதாவிற்கு மகிழ்ச்சி இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியில் சரி நான் வருகிறேன் என்று தன்னுடைய தந்தையிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்துக்கு கிளம்பினார் ராதா.


ஆனால், அவருடைய தந்தை, இரவு நேரம், பண விஷயம் இந்த நேரத்தில் தனியாக செல்ல வேண்டுமா..? காலையில் சென்று வாங்கிக் கொள்ளலாமே என்று கூறினார். 


இப்பொழுது விட்டால் அவனை பிடிக்க முடியாது அவனே இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்று நான் போய் வாங்கி வருகிறேன். ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறி கிளம்பினார் ராதா.


சொன்னபடி பேருந்து நிலையத்துக்கு சரியான நேரத்திற்கு வந்தார். அப்போது சிகப்பு நிற கார் ஒன்று அவர் அருகில் வந்து நின்றது. உள்ளே அமர்ந்திருந்தது காசி என்று நினைத்து கதவை திறந்தாள் ராதா. ஆனால், உள்ளே இருந்தது.. காசி அல்ல அவருடைய கணவர் மோகன் ரெட்டி.


அவரை பார்த்ததும் அதிர்ச்சியானார் ராதா. என்னங்க நீங்க..? எப்போ இங்க வந்தீங்க..? என்று கேட்டால். அப்போது, மோகன் முதலில் உள்ளே உட்காரு என்று கோபமாக பதிலளித்தான். காருக்குள் ஏறி அமர்ந்த ராதாவிடம் எத்தனை நாட்களாக உன்னுடைய கள்ளக்காதலன் காசி ரெட்டி உன்னை ஏமாற்றினான். இப்போ, நான் உன்னை ஏமாற்றப் போகிறேன் என்று கூறினார்.


ராதாவுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என்ன பேசுகிறீர்கள்..? காசி ரெட்டி.. இன்று இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினான் அதனால்தான் நான் இங்கே வந்தேன் என்று கூறினால் ராதா.


நீயும் காசி ரெட்டியும் சேர்ந்து என் பணத்தை ஏமாற்றி விட்டீர்கள். என்னுடைய பணத்தை நான் எப்படி திரும்ப பெறுவது என்று எனக்கு தெரியும் என்று சொல்லி கையில் வைத்திருந்த ஒரு துண்டை எடுத்து ராதாவின் கழுதை நெறித்து கொலை செய்தான் கணவன் மோகன் ரெட்டி.

ராதா துடித்தால், அவளுடைய குரல் உதவி கேட்க துடித்தது, அவருடைய உடல் தன்னை காத்துக்கொள்ள போராடியது. அந்த கார் குலுங்கியது. தன்னுடைய கடைசி சில நிமிட உலக வாழ்க்கையை தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள தன்னால் முடிந்தவரை போராடினால் ராதா. ஆனால், சில நிமிடங்களில் அவருடைய போராட்டம் அடங்கியது.


அவருடைய உடல் குளிர்ந்தது. உயிர் பிரிந்தது, மோகன் தன்னுடைய திட்டத்தின் முதல் பாதியை முழுமையாக செய்து முடித்து விட்டான். அடுத்ததாக அந்த காரை எடுத்துக்கொண்டு சாலையில் வைத்து காரை சடலத்தின் மீது ஏற்றி ஒரு விபத்து போல சித்தரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான் மோகன் ரெட்டி.


சாலையில் சிதறி கிடந்த உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அரங்கேறிய கொடுமைகள் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட் நிறைந்தவை.


ஆந்திராவிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்த கணவர் மோகன் ரெட்டி என்னுடைய மனைவி இப்படி இருக்க வேண்டுமா..? எதற்காக இவள் இந்த நேரத்துக்கு இங்கே வரவேண்டும்..? அவருடைய செல்போனையும் பரிசோதனை செய்யுங்கள்.. என்றெல்லாம் டிராமா போட்டார். காவல்துறையினர் அவருடைய டிராமாவை எல்லாம் நம்பினர்.


கடைசியாக ராதாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டது யார்..? என்று விசாரித்த போது புதிய செல்போன் நம்பர் ஒன்றிலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 


கணவரிடம் கேட்டபோது கண்டிப்பாக இந்த நம்பர் காசி ரெட்டியின் நம்பராக தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதேபோல ராதாவின் தந்தையும், ஆமாம், காசி ரெட்டி 2 லட்சம் ரூபாய் பணம் திரும்பி கொடுப்பதாக கூறினான் என்று தான் என்னுடைய மகள் வீட்டை விட்டு கிளம்பி வந்தால் என்று கூறினார். இதை தொடர்ந்து காசி ரெட்டியை அதிரடியாக கைது செய்தது காவல்துறை.

விசாரணையில் காசிரெட்டி சம்பவம் நடந்த போது இங்கே இல்லை, அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இருப்பது போலவும் எந்த ஆதாரமும் இல்லை, காசி ரெட்டி இந்த சம்பவத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை தீர்க்கமாக நிருபித்தான். அதன் பிறகு தான் போலீசாரின் விசாரணை தீவிரமானது.


ராதாவிற்கு கடைசியாக மெசேஜ் செய்த அந்த தொலைபேசி எண் யாருடைய பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது என்று தெரியவந்த போது காவல்துறை அதிர்ந்தது. அந்த சிம் கார்டு காசிரெட்டியின் பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சிம் கார்டு பயன்படுத்தப்பட்டது கணவர் மோகன் ரெட்டியின் நண்பரான கரும்பு ஜூஸ் கடைக்காரரின் தொலைபேசியில் என்பது தெரிய வந்தது.


அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரரை பிடித்து விசாரித்த போது நான் எதுவும் செய்யவில்லை. என்னுடைய நண்பர் மோகன் ரெட்டி அவசர தேவைக்காக செல்போன் வேண்டும் என்று என்னுடைய செல்போனை வாங்கி அதில் வேறு சிம் கார்டை போட்டு பேசினார். அவ்வளவுதான் எனக்கு தெரியும் என்று கூறினார்.


மோகன் ரெட்டியின் கொடூர திட்டம் வெளிவந்தது. தன்னுடைய பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மனைவியை விபத்தில் இருந்து விட்டார் என்பது போல கனவு காட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து 1.5 கோடி பெறுவதற்காக மோகன் ரெட்டி கொடூரத்தை அவன் முயற்சி இருக்கிறான்.


நீதிமன்றம், மோகன் ரெட்டியை கொலைக்கு குற்றவாளியாக அறிவித்தது. அவன் சிறையில் அழைக்கப்பட்டான். ராதாவின் குழந்தைகள், தாயின் இழப்பில் தவித்தன. குடும்பம், பணத்தை மீண்டும் பெற முயன்றது. ஆனால், உண்மையான இழப்பு, அன்பின் இழப்புதான். 

இந்தக் கதை, பணத்தின் இருள், சந்தேகத்தின் தீ, நம்பிக்கையின் அழிவு – அனைத்தையும் படம் பிடிக்கிறது. 


ஆந்திராவின் அந்தச் சிறிய கிராமம், இன்றும் ராதாவின் நினைவைத் தாங்குகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கை, ஒரு தவறான சந்தேகத்தால் முடிந்தது. ஆனால், நீதி, குற்றவாளியைப் பிடித்தது – அது, ராதாவின் கதையின் இறுதி வெற்றி.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.