படுக்கையறையில் அம்மா தன் மாமாவுடன் சேர்ந்து இருப்பதை பார்த்த 12 வயது சிறுவன்.. அரங்கேறிய கொடூரம்..!

 

மகாராஷ்டிராவின் ஜால்கான் மாவட்டத்தில், சோப்ரா என்ற சிறிய கிராமம் அமைதியாகக் கிடந்தது. பச்சை வயல்கள் சூழ்ந்த அந்த கிராமத்தில், வாழ்க்கை எளிமையானது. விவசாயம், கூலி வேலைகள், சிறிய வீடுகள் – இவைதான் அங்குள்ள மக்களின் உலகம்.

அந்தக் கிராமத்தில் வசித்த டகுடு பட்டேல் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. அவர் ஓவியம் வரைவது, கட்டுமான வேலைகள் செய்வது என எந்த வேலையானாலும் ஏற்றுக்கொள்வார். அவர் பிறந்து வளர்ந்தது அந்தக் கிராமமே. பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வந்தார்.


அவரது மனைவி கீதா பாய், அவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டவர். குடும்பத்தினரால் பார்த்து, ஜாதகம் பொருந்திப் பார்த்து நடந்த திருமணம் அது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: மூத்த மகன் மங்கேஷ், 12 வயது; இளைய மகள், 8 வயது. அண்ணன்-தங்கை இருவரும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வார்கள், ஒன்றாக விளையாடுவார்கள்.


கிராமமே இந்தக் குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தது. ஏழ்மையில் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. டகுடு பட்டேல் தனது குடும்பத்திற்காக எதையும் செய்யத் தயாரானவர். அவர் அடிக்கடி வெளியூருக்குச் சென்று, ஐந்து-ஆறு நாட்கள் தங்கி வேலை செய்து, சம்பளத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார்.


அந்தப் பணத்தை கீதா பாயிடம் கொடுப்பார். கீதா பாய் வீட்டைப் பார்த்துக்கொள்வார், குழந்தைகளை வளர்ப்பார். வெளியில் பார்க்கையில், அவர்கள் ஒரு சரியான குடும்பம் போல் தோன்றினர். ஆனால், உள்ளுக்குள் ஒரு இருண்ட ரகசியம் புதைந்திருந்தது – அது விரைவில் வெளியே வரப்போகிறது.


சனிக்கிழமை. காலை வழக்கம்போல் தொடங்கியது. மங்கேஷும் அவனது தங்கையும் எழுந்து குளித்து, அரசுப் பள்ளிக்குச் செல்லத் தயாரானார்கள். பள்ளி அருகில்தான், நடந்தே செல்வார்கள். டகுடு பட்டேல் வேலைக்குச் செல்லத் தயாரானார். கீதா பாய் அனைவருக்கும் மதிய உணவு தயாரித்தார்.


சனிக்கிழமை என்பதால், பள்ளி அரைநாள் மட்டுமே – மதியம் 2 மணிக்கு முடியும். காலை 10 மணிக்கு குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பினார்கள். மதியம் 12:30 மணி.. பள்ளி அருகே அரசியல் கட்சியின் நிகழ்ச்சி என்பதால் 2 மணிக்கு முடிய வேண்டிய பள்ளி, 12:30 மணிக்கே அரை நாள் விடுமுறை கொடுக்கப்பட்டது.


மாணவர்கள் வீடு நோக்கி மின்னலாக புறப்பட்டனர். அதே போல தான், மங்கேஷும், அவனது தங்கையும் தங்களுடைய வீட்டிற்கு கிளம்பினார்கள். வீட்டில் கீதா பாய் இருந்தார். ஆனால், அவர் தனியாக இல்லை. கீதா பாயின் வாழ்க்கையில் ஒரு இருண்ட அத்தியாயம் இருந்தது. வீட்டின் அறைக்குள் ஆண் ஒருவருடன் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் உல்லாசமாக இருந்திருக்கிறார்.


இதை கண் முன் பார்த்த சிறுவன் மங்கேஷ். அம்மா.. ட்ரெஸ் போடாம என்னம்மா பண்ற.. என்று கத்தியபடி அழுதான்.. மிரண்டு போனால் கீதா பாய்.

டகுடு பட்டேலின் அக்கா மகன் சாதன் பட்டேல் அடிக்கடி வீட்டுக்கு வருவான். 


முதலில் உறவினர் என்று தொடங்கியது, பின்னர் அது தவறான உறவாக மாறியது. சாதன் பட்டேல் இதை தனது நண்பன் ராஜேந்திர பட்டேலிடம் இதைப் பகிர்ந்தான். ராஜேந்திராவும் கீதா பாயுடன் உறவு கொள்ள ஆசைப்பட்டான். சாதன் அவனை அறிமுகப்படுத்தினான்.


கீதா பாய் தன்னுடைய உடலுறவு வெறியை அடக்க இன்னொரு வயசு பையன் கிடைச்சுட்டான் என மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றால்.

இப்படி, இருவரும் மாறி மாறி கீதா பாயுடன் தொடர்பு கொண்டனர். ஒரு கட்டத்தில், ஒரே நேரத்தில் இருவருடனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் கீதா பாய்.


டகுடு வெளியூர் சென்றால், அவர்கள் வருவார்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்தால், வீடு தான் அவர்களுக்கு சொர்க்கம். சம்பவம் அன்று, பசங்க ஸ்கூலுக்கு போயிட்டாங்க ரெண்டு மணிக்கு தான் வருவாங்க.. சீக்கிரமா வா.. என்று ராஜேந்திர பட்டேலை கீதா பாய் அழைத்திருந்தால்.

இரண்டு மணி வரை ஒரு தொந்தரவும் இல்லை என்பதால் கதவை கூட பூட்ட மறந்துவிட்டனர். திடீரென, மங்கேஷும் தங்கையும் வீடு திரும்பினார்கள். மங்கேஷ் உள்ளே நுழைந்தான். படுக்கையறை கதவைத் திறந்தான். 


உள்ளே கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடையச் செய்தது. அம்மா கீதா பாயும், அறிமுகமில்லாத ஒரு ஆணும் நிர்வாணமாக இருந்தனர்.


"அம்மா!" என்று கத்தி அழுதான் மங்கேஷ். அவன் கண்கள் பயத்தில் விரிந்தன. கீதா பாய் அதிர்ச்சியடைந்தார். ராஜேந்திர பட்டேல் பயந்தான். "இவன் இங்க என்ன பண்றான்?" என்று கோபமாக எழுந்தான். மங்கேஷ் பயந்து, "அப்பாகிட்ட சொல்றேன்!" என்று கத்தினான். அது ராஜேந்திராவின் கோபத்தைத் தூண்டியது.


அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, மங்கேஷின் தலையில் ஓங்கி அடித்தான். ஒருமுறை, இருமுறை, பலமுறை. இரத்தம் சொட்டியது. மங்கேஷ் கீழே விழுந்தான். கீதா பாய் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். தடுக்கவில்லை. அவர் ஹாலுக்கு ஓடி, தங்கையிடம், "அண்ணன் விளையாடப் போயிட்டான். நீ குளிச்சு ரெடி ஆகு, சாப்பிடலாம்," என்று சொன்னார்.


நான் காலையில தானே குளிச்சேன். தங்கை அழுதுகொண்டே குளித்தாள், சாப்பிட்டாள், தூங்கினாள். படுக்கையறையில், மங்கேஷ் இறந்துகிடந்தான். ராஜேந்திரன் தன்னுடைய நண்பன் சாதனை அழைத்தான்: "பையன் வந்துட்டான். 


நம்மள பார்த்துட்டான். கொன்னுட்டோம். என்ன பண்றது?" சாதன் விரைந்து வந்தான். மூவரும் சேர்ந்து திட்டமிட்டனர்.

உடலை சாக்குப் பையில் போட்டு, வீட்டுக்கு அருகிலுள்ள புதருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு உடலைத் துண்டுகளாக வெட்டினார்கள். காலை ஒரு இடத்தில் வீசினார்கள். மீதி பகுதிகளை ஏரியில் தூக்கி எறிந்தார்கள். 


சாக்குப் பையை ஆற்றில் போட்டார்கள். மாலை, டகுடு வீடு திரும்பினார். கீதா பாய் அழுதார்: "மங்கேஷ் காணாம போயிட்டான்." இருவரும் தேடினார்கள். அடுத்த நாள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் தேடியது. இரண்டு நாட்களுக்குப் பின், புதரில் கால் கிடைத்தது. டிஎன்ஏ சோதனையில் அது மங்கேஷுடையது என உறுதியானது.


போலீஸ் கொலை வழக்காக விசாரித்தது. கிராமத்தில் வதந்திகள் பரவின: அமாவாசை நாள், நரபலி. போலீஸ் சிசிடிவி பார்த்தது. ஒரு சாமியார் சந்தேகத்திற்குள்ளானார், ஆனால் க்ளூ இல்லை. நாய்கள் உடல் கண்ட இடத்திலிருந்து வீட்டுக்கே சென்றன. 


போலீஸ் வீட்டினரை விசாரித்தது. அக்கம்பக்கத்தினர் கீதா பாயின் தவறான உறவுகளைச் சொன்னார்கள். சாதனை கைது செய்தனர்.

அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். கீதா பாயும், ராஜேந்திராவும் கைது. அவர்கள் தங்கள் காமத்திற்காக மங்கேஷை கொன்றது தெரியவந்தது. 


கிராமம் அதிர்ச்சியடைந்தது. ஒரு தாய் தன் மகனை இழக்கும் அளவுக்கு காமம் எப்படி வென்றது? இன்று, அவர்கள் சிறையில். டகுடு தனிமையில் வாடுகிறார். தங்கை தன் அம்மாவை மறந்தாள். மங்கேஷின் நினைவு, கிராமத்தில் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. குடும்ப அன்பை விட காமம் பெரிதில்லை என்பதை நினைவூட்டுகிறது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.