இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
மழையுடன் கூடிய வானிலை தற்போது தணிந்துள்ளது, ஆனால் மழை பெய்யக்கூடும். காற்றின் வேக நிலைமை தொடர்ந்து நிலைமையை பாதிக்கக்கூடும்,
கடல் அலைகள் இரண்டு முதல் நான்கு மீட்டர் வரை உயரக்கூடும், மேலும் வடக்கு மாகாணத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது. இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
