குடும்பம் என்றால் அன்பு, பாசம், பாதுகாப்பு. ஆனால், இங்கே ஒரு தாயின் அன்புக்கு கிடைத்த பரிசு கொடூர மரணம்! ஆம், பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியில், 34 வயது நெத்ராவதி என்ற பெண், தன் சொந்த மகளாலும், அவளது காதலனாலும், அவனது மூன்று நண்பர்களாலும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இந்த பயங்கரம், சில நாட்களுக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுப்ரமண்யபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த கொலை, குடும்ப உறவுகளின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெத்ராவதி, தனது டீனேஜ் மகளுடன் உத்தரஹள்ளியில் தனியாக வசித்து வந்தார். மகளுக்கு ஒரு இளைஞனுடன் காதல் இருந்தது. யாருக்கும் தெரியாமல், அடிக்கடி அவனை வீட்டுக்கு அழைத்து வருவாள். அந்த இரவும் அப்படித்தான்... மகள் தன் காதலனுடன் வீட்டுக்கு வந்தாள்.
இரவு 11 மணி... தூங்கிக் கொண்டிருந்த நெத்ராவதி திடீரென கண் விழித்தார், தன்னுடைய மகள் உடம்பில் ஆடையின்றி நடந்து செல்வதை கண்டார், அதிர்ச்சி! மகளை பின்தொடர்ந்து சென்றதில், அவள் காதலனுடன் தனிமையில் இருப்பதை கண்டு, கோபத்தில் கத்தினார். மகளை கடுமையாக திட்டினார். சண்டை வெடித்தது... சிறு வாக்குவாதம் பெரும் வன்முறையாக மாறியது!"
கோபத்தில் துடித்த மகளும், காதலனும் நெத்ராவதியை பிடித்து அழுத்தினர். வாயை பொத்தினர். சண்டையில் துண்டை அவர் கழுத்தில் இறுக்கி, மூச்சுத்திணறச் செய்து கொன்றனர்! அதன் பிறகு இன்னும் மூன்று நண்பர்களை அழைத்து இதை தற்கொலை போல மாற்ற திட்டமிட்டுள்ளனர்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாயின் உயிர் பிரிந்தது... ஆனால், அங்கு நின்றது பயம்! இந்த ஐந்து சிறார்களும் (அனைவரும் சிறுவர்கள்) பதறியடித்தனர். கொலையை மறைக்க, நெத்ராவதியின் கழுத்தில் சேலையை கட்டி, மின் விசிறியில் தொங்கவிட்டனர்.
தற்கொலை போல நாடகமாடினர். வீட்டை பூட்டி தப்பியோடினர்.மறுநாள்... நெத்ராவதியின் அக்கா, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் வீட்டுக்கு வந்தார். ஜன்னல் வழியே பார்த்தால், அதிர்ச்சி! உடல் தொங்கிக் கொண்டிருந்தது.
உடனே காவல்துறையை அழைத்தார். திங்கட்கிழமை காலை, உள்ளூர் மக்கள் கவனித்து அறிந்தனர். காவல்துறை முதலில் 'இயற்கைக்கு மாறான மரணம்' (யுடிஆர்) வழக்கு பதிவு செய்தது. ஆனால், உண்மை வெளியே வரவில்லை. மகளின் மாயம் தான் உண்மையை உடைத்தது! நெத்ராவதியின் இறுதிச்சடங்குக்கு கூட மகள் வரவில்லை.
புதன்கிழமை, அக்கா காவல்நிலையத்தில் 'மகள் காணாமல் போனது' புகார் அளித்தார். காவல்துறை விசாரணை தீவிரமானது. காதலனை பிடித்து விசாரித்தபோது, அவன் உடைந்தான். "அம்மாவை கொன்றோம்... தற்கொலை போல போலி உருவாக்கினோம்" என்று ஒப்புக்கொண்டான்.
அதிர்ச்சி... தாயை கொன்றது சொந்த மகள்! இப்போது ஐந்து சிறார்களும் - மகள், காதலன், மூன்று நண்பர்கள் - காவல்துறை காவலில் உள்ளனர். விசாரணை நடக்கிறது. இது முன்கூட்டிய திட்டமா? அல்லது கோபத்தில் நடந்ததா? காவல்துறை ஆராய்கிறது.
இந்த சம்பவம், பெற்றோர்களின் அன்புக்கு கிடைக்கும் பேரிழப்பை நினைவூட்டுகிறது. ஒரு தாயின் கனவுகள், அவளது மகளாலேயே சிதைக்கப்பட்டது. குடும்ப உறவுகளில் நம்பிக்கை தகர்ந்து போகிறது. சமூகம் கண்ணீர் வடிக்கிறது! காவல்துறை மேலும் விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
