வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேதமடைந்த பாலங்கள் போன்ற இடங்களை வேடிக்கை பார்ப்பதற்காகச் செல்வதைத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பல இடங்களில் ஆபத்துகள் காணப்படுவதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
