பட்டப்பகலில் அரங்கேறிய படுகொலை. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நகரசபை உறுப்பினர்
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் வைத்தே இன்று நகரசபை உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நகரசபை உறுப்பினர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
