இஸ்ரேலில் இன்று மற்றுமொரு இலங்கையர் காலமானார்
இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்த மற்றொரு இலங்கையர் இன்று துரதிர்ஷ்டவசமாக காலமானார்.
குருநாகல், கல்கட்டுயாய, கிரிந்தாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான சானக எரந்தா என்பவர் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
கடந்த சில தினங்களின் முன் இஸ்ரேலில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் சூடான் நாட்டவரால் குத்திக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

