எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு

 உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 

இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத காலநிலையால் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, பரீட்சை காலப்பகுதியில் அனர்த்த அபாயமற்ற சூழலை உருவாக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி ஆவணம் ஒன்றையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது. 

ஏதேனும் அனர்த்த நிலைமை காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய பரீட்சை அவசர நடவடிக்கைப் பிரிவின் விசேட அழைப்பு இலக்கங்களான 0113 668 026, 0113 668 032, 0113 668 087, மற்றும் 0113 668 119 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொண்டும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.