எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்க 25 லட்சம் சம்பளம்.. இந்தியாவில் தான்.. எங்கே தெரியுமா

 


கர்ப்பமாக்கும் வேலையுக்கு 25 லட்சம் சம்பளம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயங்கி, 44 வயது ஆண் ஒருவர் 11 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ மூலம் தொடங்கிய இந்த மோசடி, சமூக ஊடகங்களில் பரவும் போலி வேலை வாய்ப்புகளின் ஆபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ, இளம் பெண் ஒருவர் 'பிரக்னன்ட் ஜாப்' என்ற பெயரில் விளம்பரம் செய்தது. "என்னை கர்ப்பமாக்குபவருக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம்! படிப்பு, சாதி, வயது, நிறம், பணநிலை எதுவும் தேவையில்லை.ஆணாக இருந்தால் போதும். உடனே தொடர்பு கொள்ளுங்கள்!" என்று அவர் அறிவித்திருந்தார்.

வீடியோவில் தெரிந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு செய்யும்படி வற்புறுத்தியது. இந்த விளம்பரம் கடந்த மாதம் முழுவதும் வைரலாகி, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.இந்த விளம்பரத்தில் சிக்கியவர் சென்னை புடைவை சேர்ந்த தாராள பிரபு

சமூக சேவை என்று நம்பி, வீடியோவில் தெரிந்த எண்ணுக்கு அழைத்து 'பிரக்னன்ட் ஜாப்' நிறுவனத்தில் சேர என்ன செய்ய வேண்டும் என்று விசாரித்தார். எதிர்த்தரப்பில் இருந்து ஒருவர், நிறுவன உதவியாளராக அறிமுகம் செய்து கொண்டு, முதலில் "அடையாள அட்டை"க்கு 5,000 ரூபாய் செலுத்தச் சொன்னார்.

மயக்கத்தில் இருந்த தாராள பிரபு உடனே பணத்தை அனுப்பினார்.அடுத்த சில நாட்களில், "பதிவு கட்டணம், மருத்துவ சோதனை, ஜிஎஸ்டி, டிடிஎஸ் செயலாக்கு கட்டணம்" போன்ற பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்கப்பட்டது.

மொத்தம் 100-க்கும் மேற்பட்ட UPI மற்றும் IMPS பரிமாற்றங்கள் மூலம் செப்டம்பர் முதல் அக்டோபர் 23 வரை 11 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்ததும், மோசடிக்காரர்கள் மிரட்டி கட்டாயப்படுத்தியதாக தாராள பிரபு புகார் அளித்துள்ளார்.

"அது சமூக சேவை என்று நம்பினேன். இப்போது அனைத்தும் போலி என்று தெரிந்தது," என்று அவர் கூறினார்.புகாரின் பேரில், உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மோசடிக்காரர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய சைபர் கிரைம் அதிகாரி ஒருவர், "2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்துள்ளன. பெண்களின் வீடியோக்களைப் பயன்படுத்தி ஆண்களை ஈர்த்து, பதிவு கட்டணம், மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு வைப்பு என்ற சாக்கில் லட்சக்கணக்கான ரூபாய்களை சுருட்டுகின்றனர். பணம் வாங்கியதும் காணாமல் போய்விடுகின்றனர்.

பிற மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்களின் ஆபத்தை எச்சரிக்கிறது.

போலீஸ், "அந்நிய எண்களுக்கு அழைப்பதற்கு முன் உறுதிப்படுத்துங்கள். விளம்பரங்கள் நம்பகமானவையா என சரிபாருங்கள்," என்று மக்களை விழிப்புணர்த்தியுள்ளது. இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, சைபர் கிரைம் தளத்தில் புகார் அளிக்கலாம்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.