எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

கணவனுக்கு பயந்து மனைவி செய்த திருவிளையாடல்-தமிழர் பகுதியில் சம்பவம்

 

45 இலட்சம் பெறுமதியான நகையை விற்ற நிந்தவூர்_பெண் கணவனுக்கு பயந்து பொலிஸாரை ஏமாற்றி நாடகம் 

-  14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 ஆந்திகதி அன்று அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதியிலுள்ள வீடான்றில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைககள்  களவாடப்பட்டுள்ளதாகவும் தனது கணவர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திடீரென திரும்பவுள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.நிசாந்த வெதகே வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம்.அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் புலன்விசாரணைகள் துரிதகதியில் மேற்கொண்டிருந்தன.

இதற்கமைய அம்பாறையிலிருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்பநாய் பிரிவு என்பன இச்சோதனையில் பங்கேற்றிருந்தன. 

இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டற்கான சான்றுகளோ அல்லது மேற்கூறப்பட்ட  45 இலட்சம் ரூபா  நகைகள் திருடப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. 

இருப்பினும், விசாரணையின் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த பொலிஸார் அப்பெண்ணை கடந்த ஓக்டோபர் மாதம் 3 ஆந்திகதி  துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதன்போது பல்வேறு உண்மைகள் வெளிவரத்தொடங்கியது.

இதனடிப்படையில், கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகச்சென்ற நிலையில் தனியாக  இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த குறித்த பெண் தனது கையிருப்பிலிருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற கணவன் திடீரென நாடு திரும்பும் நிலையில் இருப்பதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் சற்று கலவரமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நகைககள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடி கல்முனை பகுதியிலுள்ள பிரபல நகையகத்திற்குச்சென்று  நகைகளை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், இச்செயற்பாட்டினை   தனது கணவர் வெளிநாட்டிலிருந்து திடீரென இலங்கை வரவுள்ளதாக தன்னிடம் தெரிவித்ததனால் இவ்வாறு நகைககள் திருடப்பட்டதாக நாடகமாடியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட  அப்பெண் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர். 

இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.

பின்னர் சந்தேக நபரான குறித்த பெண் சார்பில்  இடைமனுக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்போது  அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில்  கடும் தொனியில் சந்தேக நபரை எச்சரித்த நிலையில் பிணையில் செல்ல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.