கள்ள காணி உறுதி எழுதியதால் யாழ்ப்பாண சட்டத்தரணி கௌதமனை கைது செய்ய பொலிசார் வலை வீசித் தேடி வருகின்றார்கள். தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் உயர் அதிகாரியை சுமந்திரனுடன் சென்று சந்தித்த போதும் தான் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது போன காரணத்தால் சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமன் தற்போது தலைமறைவாகியுள்ளார். யாழ்பாணப் பொலிசார் அவரை வலை வீசித் தேடிவருவதாகத் தெரியவருகின்றது.
மன்னாரில் உள்ள காணி ஒன்றை கள்ளத்தனமாக உறுதி முடித்து விற்ற காரணத்தாலேயே கௌதமனை கைது செய்ய பொலிசார் தேடித்திரிவதாகவும் தெரியவருகின்றது.
