நான்கு ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஆத்தனஞ்சேரி திருமகள் நகர் பகுதியில் நடந்த கொலை சம்பவம், குடும்ப உறவுகளின் இருண்ட முகத்தை வெளிப்படுத்தியது.
காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று, அவரது சடலத்தை எரித்து மறைக்க முயன்ற மனைவியின் வெறுமனே காதலுக்காகவே இந்த இரட்டை கொலை நடந்தது. இந்த வழக்கு, இன்றும் சமூகத்தில் குற்ற உணர்வின்மை மற்றும் குடும்ப பிரச்சினைகளின் ஆழத்தை எச்சரிக்கும் வகையில் பேசப்படுகிறது.
2021 ஆகஸ்ட் மாதம், 44 வயது தங்கவேல், அவரது 37 வயது மனைவி விமலா ராணி மற்றும் அவர்களின் 10 வயது மகன் ஹரிஷ் ராகவ் ஆகியோர் அமைதியான வாழ்க்கை நடத்தினர்.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, தங்கவேலின் சகோதரர் சக்திவேல், சகோதரனின் செல்போனில் தொடர்பு கொண்டபோது, விமலா ராணி பதிலளித்து, "மகன் கிளாஸுக்கு பயன்படுத்துகிறான்" என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
அடுத்த நாள் மீண்டும் அழைத்தபோது யாரும் பதிலளிக்கவில்லை. சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்த சக்திவேல், வீடு காலி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தங்கவேல், விமலா ராணி மற்றும் ஹரிஷ் ஆகியோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடல் நடத்தினர்.
ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு 7 மணிக்கு, விமலா ராணி மகன் ஹரிஷ் உடன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் தானாக சரணடைந்தார். விசாரணையில், அவர் போலீசாரை அதிர வைத்த வாக்குமூலத்தை அளித்தார்
10 ஆண்டுகளுக்கு முன் தங்கவேலை காதலித்து திருமணம் செய்த விமலா ராணிக்கு, சேலத்தில் வசித்தபோது பக்கத்து வீட்டு இளைஞர் ராஜாவுடன் இரண்டாவது காதல் மலர்ந்தது. இதை அறிந்த தங்கவேல், வேலை மாற்றி சோமங்கலத்துக்கு வந்தார்.
இருப்பினும், ஏழு ஆண்டுகளாக தங்கவேலுவுடன் விமலா ராணி வாழ்ட்ன்ஹாலும் தனது கள்ளக்காதலன் ராஜாவை தான் கணவனாக நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். அவருடன், செல்போனில் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். தங்கவேல் வீட்டில் இல்லாத நாட்களில் ராஜா வீட்டுக்கு வருவதும் உல்லாசமாக இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு, குடும்பத் தகராறில் தங்கவேல் விமலா ராணியை அடித்ததாகக் கூறி, வீட்டில் தங்களில் மகன் உடன் இருக்கும் போதே அசிங்கமாக கணவன் தங்கவேலுவை திட்டிய விஷ தேவதை விமலா ராணி சமையலறையில் இருந்த அரிவாள் மனையை எடுத்து அவரது கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
அப்போது இரவு 10 மணி வரை சடலத்தை பெட்ரூமில் மறைத்து வைத்திருந்தார். பின்னர், சேலத்தில் இருந்து தன்னுடைய கணவன்.. அதான் அம்மணியின் கள்ளக்காதலனை ராஜாவை அழைத்து, சடலத்தை அருகிலுள்ள ஏரியில் வீசிவிட்டேன் என கூறியுள்ளார். ஆனால், ஏரியில் தேடிய போது எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் விசாரணையில் விமலா ராணி முரண்பாட்டான பதில்கள் அளித்ததால், போலீசார் தேடலை நிறுத்தி, அவர் குறிப்பிட்ட தொழிற்பேட்டை பகுதியில் தேடினர். அங்கு பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
DNA சோதனையில் அது தங்கவேலின் சடலமாக உறுதிப்படுத்தப்பட்டது. சடலத்தை அடையாளம் தெரியாமல் இருக்க எரிப்பதற்காக ராஜா தீ வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. விமலா ராணி கைது செய்யப்பட்டார். காதலன் ராஜாவை தேடி வருவதாக மணிமங்கலம் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது 10 வயது மட்டுமே இருந்த ஹரிஷ் ராகவ், தற்போது 14 வயதாக உள்ளார். அவர் மனநல பாதுகாப்புக்காக குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சு வழியாகவோ அல்லது நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றோ தீர்க்கலாம் என்பதை வலியுறுத்துகிறது.
வன்முறைக்கு தாவினால், குற்றவாளியின் வாழ்க்கை மட்டுமின்றி, குழந்தைகளின் எதிர்காலமும் சீரழிந்துவிடும். போலீஸ் அதிகாரிகள், "இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆரம்பத்திலேயே ஆலோசனை பெறுங்கள்" என்று எச்சரிக்கின்றனர்.இந்த வழக்கு, 2021-ல் நடந்தாலும், இன்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. மேலும் விவரங்களுக்கு காவல் துறையை தொடர்பு கொள்ளலாம்.
