மலேசியாவில், தனது காதலன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஆத்திரத்தில் அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டி தூண்டிய 34 வயது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி நடந்தது.
பாதிக்கப்பட்டவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமூக ஊடகங்களில் இரு தரப்பு வாதங்களும் எழுந்துள்ளன. தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது) என்ற 34 வயது பெண், தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் காதலில் இருந்து வந்தார்.
பூபேஸ் தனது திருமணத்தை மறைத்து அவளுடன் உறவு கொண்டதாகவும், வங்கதேசத்தில் உள்ள தனது மனைவியுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 8 அன்று, தஸ்லீமா பூபேஸின் திருமண ரகசியத்தை அறிந்ததும், அவரிடம் நேரடியாக கேள்வி கேட்காமல் ரகசிய திட்டத்தைத் தீட்டினார்.
இருவரும் வழக்கம்போல உல்லாசமாக இருக்கும் இடத்தில் சந்தித்தனர். அங்கு தஸ்லீமா, "பூபேஸ், உனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? உண்மையைச் சொல்லு, நான் எதுவும் செய்யமாட்டேன். இனிமே என்னுடன் மட்டும் இருந்தால் போதும்" என்று காதல் ரசம் சொட்ட பேசி உண்மையை உறுதிப்படுத்தினார்.
அதற்கு பூபேஸ், " என்னை தப்பா நினைச்சுக்காத.. ஆம், எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நீ திருமணத்திற்கு ஒத்துக்கொண்டால், அவளை விவாகரத்து செய்துவிடுகிறேன்" என்று பதிலளித்தார். இந்த உண்மை அறிந்து அதிர்ந்த தஸ்லீமா, தனது கொடூர திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கினார்.
இருவரும் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்கத் தொடங்கினர். வேலைகள் வேகமெடுத்தன. முன் விளையாட்டுகள் முடிந்தது. அடுத்த நிமிடம், தஸ்லீமா "இன்று நானே உனக்கு ஆணுறை மாட்டிவிடுகிறேன்" என்று கூறினார். வெக்கமாக உணர்ந்த பூபேஸ் சம்மதம் தெரிவிக்க, சரி கண்ணை கட்டிக்கோ என்று துணியை கொண்டு பூபேஸின் கண்களை கட்டினார் தஸ்லீமா.
ஹேண்ட்பேக்கில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பைத் துண்டித்துவிட்டு, "எவ்வளவு தைரியம் இருந்தால் ஊரில் உள்ள மனைவியுடன் தினமும் பேசி, என்னை ஏமாற்றினாய்?" என்று கோபத்தில் கத்திவிட்டு தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த பூபேஸ், உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டார். மயங்கிய நிலையில் கிடந்த பூபேஸின் மிரள வைக்கும் காட்சியை பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், போலீஸுக்கும் தகவல் அளித்தனர். சிகிச்சைக்குப் பின் சுயநினைவு திரும்பிய பூபேஸ் கொடுத்த வாக்குமூலத்தில், சம்பவத்தின் முழு விவரங்களும் வெளியானது.
இது குறித்து, காவல் அதிகாரி கூறுகையில், "குற்றவாளி ஐந்து நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார், அக்டோபர் 13 வரை" என்றார். மேலும், இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 (ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 1959/63 குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) (சட்டவிரோதமான நுழைவு அல்லது தங்கியிருத்தல்) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் சேர்த்தார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர், "மனைவிக்கு துரோகம் செய்த பயலுக்கு இது சரியான தண்டனை" என்று கருதுகின்றனர்.
மறுபக்கம், "காதலனை நம்ப வைத்து இப்படி கொடூரத்தைச் செய்தது தஸ்லீமாவின் தவறு" என விமர்சிக்கின்றனர். நெட்டிசன்களின் இரு வேறுபட்ட கருத்துகள், இந்தச் சம்பவத்தைப் பற்றிய விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தகைய தகாத உறவுகளால் ஏற்படும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் குறித்து சமூக விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

