17வயது சிறுமிக்கு நடந்த துயர சம்பவம்...அந்த சிறுமி கர்பமாக இருந்த நிலையில் கருவை கலைக்க நாட்டு மருத்து சாப்பிட்டதால் உயிரிழந்த சோகம்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் உள்ளூர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாகவும் இதை பெற்றோரிடம் தெரிவிக்காமல் 7 மாதங்கள் வரை மறைத்து வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
விஷயம் தாமதமாக பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, கருவை கலைக்க நாட்டு மருந்துகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், கடந்த 24ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி உயிரிழந்தார்.
இந்த சோகமான மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கர்ப்பத்திற்கு காரணமான நபர் யார்? நாட்டு மருந்து வழங்கியவர் யார்...? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#viral #die #rip #teenagegirl
