எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

3 பிள்ளைகள் பெற்றும் அடங்காத காமம்-வீதியில் கிடந்த கணவனின் உடலம்-மனைவி அரங்கேற்றிய கொடூரம்

 

மனைவியின் விபரீத ஆசையால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்...!!!

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மந்திரவாதியை ஏவி மனைவி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்குக் கிடைத்துள்ளது. ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ராமுலு (35) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மானசா (35). தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ராமுலுவின் வீட்டில் நகை திருடு நடந்தது. திருடியவர் யார் என்பதை அறிய, இருவரும் பெத்த முதுநூரு பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் (27) என்பவரை அணுகினர். பூஜை நடத்தும் போது மானசாவுக்கும் சுரேஷுக்கும் இடையே நெருக்கம் உருவாகி, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

பின்னர் இதை கணவன் ராமுலு அறிந்தார். கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறியதால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மானசா தனது கணவனை கொலை செய்ய மந்திரவாதி சுரேஷிடம் ஆலோசித்தார்.

இதற்காக சுரேஷ் தனது ஊழியர் பாலபீர் மற்றும் மைத்துனர் ஹனுமந்து ஆகியோருக்கு தலா ரூ.2.80 லட்சம் வழங்கி கொலைக்கு திட்டமிட்டார். கடந்த 8ஆம் தேதி மானசா உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ளும் பெயரில் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவரை கொலை செய்தாலும் தமக்குச் சந்தேகம் வராது என சுரேஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி சுரேஷ், ராமுலுவை பெத்த முதுநூரு புறநகர் பகுதியில் வரவழைத்தார். அங்கு அவருக்கு மது கொடுத்து போதையில் ஆழ்த்தினர். பின்னர் ராமுலுவின் வாய் மற்றும் மூக்கில் ஸ்டிக்கர் ஒட்டி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்தனர். பிறகு விபத்தாக இறந்தது போல காட்ட, உடலில் காயங்கள் ஏற்படுத்தி சாலையோரம் வீசிவிட்டனர்.

சாலையில் உடல் கிடந்ததை கண்டு உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் இது கொலைச் சம்பவம் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரித்த போலீசாருக்கு, ராமுலுவை மந்திரவாதி சுரேஷ் மற்றும் மனைவி மானசா இணைந்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் சுரேஷ், மானசா, பாலபீர், ஹனுமந்து ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.