14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- இளைஞனுக்கு விளக்கமறியல்!!
14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ஜெயக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பீ..அன்பார் முன்னிலையில் (05) சந்தேக நபரை ஆஜர் படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை செல்லக்கூடிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 மற்றும் சிறுவர் நன்னடைத்தைகள் திணைக்களம் போன்றவற்றிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதனையடுத்து குறித்த பாடசாலை மாணவியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரான 18 வயது இளைஞனை தண்டனை சட்டக் கோவை 364 கீழ் கைது செய்து எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
