மட்டக்களப்பில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பற்மநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

