குருநாகல், வெஹராவில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.