திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் மிதவை ஒன்று இன்று (21) கரையொதுங்கியுள்ளது.
12 அடி சுற்றளவும், 7 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.இது என்ன பொருளென சரியாக இணங்காணப்படவில்லை.பிரதேச மக்கள் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.